தூத்துகுடிக்கு சென்றார் நடிகர் விஜய்
தூத்துகுடியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பல கட்சியின் தலைவர்கள், நடிகர்கள் தூத்துகுடிக்கு சென்று வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார்
துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான குடும்பத்தினர்களுடன் விஜய் தரையில் அமர்ந்து ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய ஆரவாரமின்றி விஜய் தூத்துகுடி சென்று வந்ததை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.