shadow

‘தெறி’யின் கோவை உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.
1-theri
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் ரிலீஸ் உரிமையை சினிகேலக்ஸி என்ற நிறுவனம் பெற்று புரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைகளும் ஒவ்வொன்றாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக தலைநகர் சென்னையை  அடுத்து பெரிய நகரமான கோவை பகுதியின் ரிலீஸ் உரிமையை மோனிகா பிலிம்ஸ் செந்தில்குமார் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்றுள்ளாராம். மோனிகா பிலிம்ஸ் ஏற்கனவே ரஜினியின் ‘எந்திரன்’ மற்றும் சூர்யாவின் ‘சிங்கம்’ படங்களை கோவையில் ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரலாறு காணாத வகையில் பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய செந்தில்குமார் திட்டமிட்டுள்ளாராம். மேலும் இப்போதே தியேட்டர்களை புக்கிங் செய்யும் பணியையும் அவர் தொடங்கிவிட்டாராம்.

மேலும் பல பகுதிகளின் ரிலீஸ் உரிமைகளை பெற விநியோகிஸ்தர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தயாரிப்பாளர் தாணு எதிர்பார்த்ததைவிட அதிக தொகை இந்த படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மற்றும் விஜய் மகள் திவ்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply