‘தெறி’ சக்ஸஸ். ஃபேஸ்புக்கில் நன்றி சொன்ன விஜய்
கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன திரைப்படம் விஜய்யின் ‘தெறி. உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனம் பெற்றுள்ளதால் இந்த படத்தின் வசூல் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். ‘தெறி’ படத்தை வெற்றிப்படமாக ஆக்கிய பெருமை ரசிகர்களையே சேரும் என்றும் ரசிகர்களும், ஊடகங்களும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
‘புலி’ படத்தின் தோல்வியால் துவண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு ‘தெறி’ படத்தின் வெற்றி புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஒருசில சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனம் செய்து வந்தபோதிலும், ஃபேமிலி ஆடியன்ஸ் வார இறுதியில் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும் இன்று நாளையும் பெரும்பாலான காட்சிகளின் ரிசர்வேஷன் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெள்விஅந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.