விஜய் வேனில் மட்டும் ஏறவில்லை எங்கள் மனதிலும் ஏறிவிட்டார்: ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென கடந்த வாரம் திடீரென விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது அவரை நெய்வேலியிலிருந்து வருமானவரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவது அந்த பகுதி மக்களுக்கே பலருக்கு தெரிய வந்தது
இந்த நிலையில் வருமான வரி ரெய்டு முடிந்ததும் மீண்டும் தற்போது விஜய் படப்பிடிப்பில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் நேற்றைய படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் தன்னைப் பார்ப்பதற்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அதுமட்டுமின்றி அங்கிருந்த வேனில் ஏறி அங்கிருந்து அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் வேனில் மட்டும் ஏறவில்லை எங்கள் மனதிலும் குடியேறி விட்டார் என்று உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply