விஜய்சேதுபதி-அஞ்சலி இணையும் அடுத்த படம்
நடிகர் விஜய்சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் அரைடஜன் படங்களுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார் என்பதும் இறைவி படத்திற்கு பின்னர் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் படம் இது என்பதும் கூறிப்பிடத்தக்கது
இந்த படத்தை ‘அருண்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் இந்த படம் மூலம் 3வது முறையாக விஜய்சேதுபதியுடன் இவர் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் லிங்கா என்பவர் வில்லனாகவும், விவேக் பிரச்சன்னா ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்கவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.