விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.

வில்லன் தோட்டா ராய், வெளிநாட்டு உளவாளியாக இந்தியாவுக்குள் நுழைகிறார். கொல்கத்தாவில் பயங்கர குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கும் அவரை பிடிக்க கொல்கத்தா போலீஸ் விஜய் உதவியை நாடுகிறது. விஜய் அவர்களுக்கு உதவி செய்து, வில்லனை பிடிக்க உதவுகிறார். அதன்பின்னர் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை பழிவாங்க முடிவு செய்து, விஜ்ய்யை தேடி சென்னை வருகிறார்.

சென்னையில் விஜய்யை பார்த்து கொல்ல முயற்சி செய்யும்போதுதான் தெரிகிறது இது தான் தேடிவந்த விஜய் அல்ல, அவரைப்போலவே உருவம் உள்ள இன்னொருவர் என்பது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.  இந்த கதை இன்று காலை முதல் இணையதளங்கள், ஃபேஸ்புக் முதலியவற்றில் லீக் ஆகியுள்ளதால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். கதையில் சில மாற்றங்கள் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.

அழகிய தமிழ்மகன் படத்திற்கு பின்னர் விஜய் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

Leave a Reply