விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த மதகஜராஜா திரைப்படத்தின் பிரச்சனைகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் பிரச்சனைகளை முடித்து வைத்த பெருமை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரையே சேரும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்க்யூட் மற்றும் அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்ற செல்வகுமார், மதகஜ ராஜா படத்தை தானே ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளார். அதனால் பிரச்சனைகள் முடிந்து வரும் மார்ச் 7ஆம் தேதி தமிழகமெங்கும் மதகஜ ராஜா ரிலீஸ் ஆகிறது.
கலகலப்பு படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கிய இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நினைத்துதான் விஷாலே ரிலீஸ் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. தற்போது பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷாலின் மார்க்கெட் உயர்ந்திருக்கும் சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது. விஷால் தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.