shadow

ஆஜராக அவகாசம் கேட்கிறார் விஜய் மல்லையா
vijay mallaiya
ஏற்கனவே இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்று அதை கட்டாமல் தலைமறைவாகியுள்ள தொழிபதிபர் விஜய்மல்லையா மிது அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஒன்றும் உள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு இன்று அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் இன்று விஜய் மல்லையா ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தான் நேரில் ஆஜராக மே இறுதி வரை அவகாசம் வேண்டும் என்று விஜய் மல்லையா தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரியிருப்பதாக மல்லையா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான கடிதம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை அமலாக்கப்பிரிவு ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும்.

Leave a Reply