கடந்த ஞாயிறு அன்று ஐதராபாத்தில் ஹூட் ஹூட் புயல் நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியாக ’மெமு சைதம்’ நிகழ்ச்சி நடந்தது. இதில்,தெலுங்கு திரையுலக பிரமுகர்களான மோகன்பாபு, சிரஞ்சிவி, மகேஷ்பாபு, ராம் சரண், சமந்தா, காஜல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமந்தாவிடம் விஜய் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா பதில் அளித்தார்.
” விஜய் மிகவும் அமைதியானவர்; அதிகம் பேச மாட்டார். ‘ஷாட் ரெடி’ என்று கூறும் வரை அமைதியாக இருப்பார். ஆனால்’ஷாட் ரெடி’ என சொன்னால் போதும். உடனே அடுத்த வினாடியே அவருக்குள் எனர்ஜி வந்துவிடும், ஒவ்வொரு ஷாட்டிலும் சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து ஸ்கோர் செய்வார். இதனால் நாங்கள் விஜய்யை ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி பெர்சன் என்றே நினைப்போம் என விஜய்யைப் பற்றி கூறினார். சமந்தா விஜய்யை புகழ்ந்து சொல்கிறாரோ அல்லது அன்னியன் மாதிரி விஜய் ஒரு லூசு என இகழ்ந்து கூறுகின்றாரா என்பது புரியாமல் ஆடியன்ஸ் குழம்பினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.