shadow

நாளை மறுநாள் மீண்டும் ரிலீஸ் ஆகிறது விஜய்யின் ‘தெறி’

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன நிலையில் நாளை மறுநாளுடன் ஒருவருடம் பூர்த்தி ஆகின்றது.

எனவே சூப்பர் ஹிட் வெற்றி படமான ‘தெறி’ திரைப்படத்தின் ஒருவருட பூர்த்தி நாளை கொண்டாட விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் சென்னை கோயம்பேடு ரோஹினி தியேட்டர் நிர்வாகிகளிடம் பேசி ‘தெறி’ படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த காட்சிக்கு ஒருசில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்ததை அடுத்து தியேட்டர் நிர்வாகமே முன்வந்து மேலும் இரண்டு காட்சிகள் திரையிட முடிவு செய்துள்ளது. எனவே வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரோஹினி திரையரங்கில் ‘தெறி’ மூன்று காட்சிகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் போரூர் தியேட்டர் ஒன்றிலும் ‘தெறி’ படத்தின் ஒரு காட்சி திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply