shadow

‘வாலு’ படத்திற்காக விஜய் பணம் எதுவும் கொடுக்கவில்லை. சிம்புவின் அதிர்ச்சி பேட்டி

vijayசிம்புவின் வாலு படம் பலவித பிரச்சனைகளுக்கு பின்னர் இன்று ஒருவழியாக வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த படத்தின் விமர்சனம் வெளிவரவுள்ள நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவிய விஜய்க்கு அவர் நேற்று ஒரு பேட்டியில் நன்றி கூறினார். இருப்பினும் விஜய் பண உதவி எதுவும் செய்யவில்லை என்றும், ரிலீஸ் செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் அவர் தனது பி.ஏ செல்வகுமார் மூலம் செய்ததாக சிம்பு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

இதுகுறித்து சிம்பு கூறியதாவது, “வாலு படத்திற்காக பணம் கொடுத்து விஜய் உதவி செய்யவில்லை. இப்படத்துக்கு வெளியீட்டில் பிரச்சினை எழுந்தபோது விஜய் தரப்பில் இருந்து பி.டி.செல்வகுமார் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இப்போதும் காலையில் இருந்து, இரவு வரை கூடவே இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் முடித்து கொடுத்து படம் வெளிவர உதவி செய்கிறார். அந்த வகையில் எனக்கு விஜய் அண்ணா செய்த உதவியை இன்றைக்கு அல்ல என்றைக்குமே மறக்க மாட்டேன்” என்று சிம்பு கூறியுள்ளார்

மேலும் அஜீத் குறித்து சிம்பு கூறியபோது, ” இந்த விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’ என்று கூறியிருக்கிறார். ‘வாலு’ படத்தின் தயாரிப்பாளராக நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் இருக்கிறார். அவர் அஜித் சாரின் நண்பர். அதனால் கூட அஜித் சார் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்.

Leave a Reply