shadow

vijay functionகடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று விஜய்க்கு “அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்” கொடுத்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதிலும், இறுதியில் அந்த பட்டத்தை தான் ஏற்றுக்கொள்வதாக விஜய் மறைமுகமாக தெரிவித்துவிட்டார். அந்த பட்டத்தை அவர், அந்த பத்திரிகைக்கு காசு கொடுத்து வாங்கியதாக கூட செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற இளையதளபதி விஜய்க்கு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராட்டு விழா எடுக்க மதுரை ரசிகர்கள் முடிவு செய்தனர். இதனை விஜய்யிடம் தெரிவித்தபோது அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய அனுமதித்தார்.

இந்தவிழாவுக்கு கோலிவுட்டின் முக்கிய திரைநட்சத்திரங்களை விஜய் தானே முன்வந்து அழைத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சுதந்திர தினவிழா நடக்கவிருப்பதால், விஜய் விழாவுக்கு அனுமதி கொடுக்க மதுரை போலீஸார் மறுத்துவிட்டனர். வெறும் தனிமனித விளம்பரத்திற்காக நடத்தப்படும் இதுபோன்ற விழா தேவையா? என்று தமிழக மேலிடம் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் தற்போது விழாவை பெங்களூர் அல்லது திருவனத்திற்கு மாற்ற அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் பெருமளவு ரசிகர்கள் இருப்பதால் இந்த விழாவை அங்கு பிரமாண்டமாக நடத்தலாம் என எண்ணுகிறார். ஆனால் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவும், முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளாவும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் நிலையில் விஜய், இந்த இடங்களில் பாராட்டு நடத்தினால் தமிழ் அமைப்பினர் கொந்தளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘கத்தி’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என மாணவர் அமைப்பு ஒன்று கொடுத்த புகாருக்கு சக்திவாய்ந்த பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply