விஜய் நடித்து வந்த ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜூலை 20 முதல் விஜய்-அட்லி இணையும் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா ‘கத்தி’ படத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஏற்கனவே போக்கிரி, ஜில்லா போன்ற படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்றும், காமெடி, ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட் கலந்து அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக அட்லி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் எமி ஜாக்சன் இரண்டாவது கதாநாயகியாகவும், படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.