shadow

நடிகர் சங்க தேர்தலால் வெளிச்சத்துக்கு வந்த விஜய்-சூர்யா பகை.
vijay surya
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி ஒருபுறமும், விஷால் அணி மறுபுறமும் மோதுவது போல் அனைவருக்கும் தெரிந்தாலும் உண்மையில் இந்த மோதல் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர்களுக்கு இடையே நடைபெற்று வருவதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது சூர்யா அல்லது கார்த்தி படங்கள் வேண்டுமென்றே போட்டியாக வெளியாகி வருவதாகவும், இந்த போட்டியில் தொடர்ந்து சிவகுமார் குடும்பமே வெற்றி பெற்று வருவதால் சூர்யா-கார்த்தி மீது விஜய் கடும் கோபத்தில் உள்ளதாகவும், அதன் காரணமாகவே விஜய், மறைமுகமாக சரத்குமார் அணியை ஆதரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எஸ்.தாணு, சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்தது விஜய்யின் நெருக்கடியினால்தான் என்று கூறப்படுகிறது. மேலும் தன்னை போலவே சூர்யாவை சிம்பு எதிர்ப்பதால்தான் சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு விஜய் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

விஷால் மற்றும் கார்த்தி நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வந்துவிட்டால் தனக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என விஜய் கருதுவதாகவும், அதன் காரணமாகவே விஜய் மறைமுகமாக சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்-சூர்யா மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் 18ஆம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Reply