‘தெறி’ படத்தின் இறுதி நாளில் விஜய்-சமந்தா திருமணம்.
இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வந்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பொங்கல் தினத்துடன் முடிவடைந்தது. கடைசி நாளன்று விஜய் மற்றும் சமந்தாவின் திருமணத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் கூறுகின்றனர்.
இந்த படத்தில் விஜய், விஜயகுமார் ஐ.பி.எஸ் என்ற கேரக்டரிலும், சமந்தா, மித்ரா எம்.பி.பி.எஸ் என்ற கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி நாளில் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் மண்டபம் போன்ற செட் ஒன்றில் விஜயகுமார் ஐ.பி.எஸ் வெட்ஸ் மித்ரா எம்.பி.பி.எஸ் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் இந்த படத்தில் சுபமுடிவு இருப்பதாக அறிய முடிகிறது. மேலும் இந்த படத்திற்காக விஜய் வேஷ்டி சட்டை மற்றும் தொப்பி அணிந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாகவும், இந்த பாடலின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமான செட் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் வேஷ்டி, சட்டை மற்றும் தொப்பியுடன் கூடிய ஸ்டில்களும் தற்போது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது..
Leave a Reply
You must be logged in to post a comment.