விஜய்-அமலாபால் விவாகரத்து மனு இன்று தாக்கல். கோலிவுட் அதிர்ச்சி
கோலிவுட் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடி என்று வர்ணிக்கப்பட்ட விஜய்-அமலாபால் தாம்பத்ய வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஆம், இன்று விஜய்-அமலாபால் இருவரும் விவாகரத்து சமரச விவாகரத்து மனுவை சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி தீபிகா முன் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக விஜய்-அமலாபால் விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். அதில் தங்கள் இருவருடைய உறவில் நம்பிக்கையும், நேர்மையும் இல்லை என வருத்தத்துடன் கூறியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் சட்டப்படி பிரிய இன்று மனுதாக்கல் செய்துள்ளனர். இருவருமே சமரசமாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதால் விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் விஜய்-அமலாபால் ஜோடியின் பிரிவை கோலிவுட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.