இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று முதல் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் ஒரு பாடல் காட்சியுடன் இந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன் நடிகரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் பத்து நாட்கள் ‘விஜய் 59’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதன் பின்னர் ஒருவார கால இடைவெளி விட்டு இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய்,சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா நடிக்கும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.