மணிரத்னம் படத்தின் காப்பியா விஜய் 59′
அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் கதை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மணிரத்னம் திரைக்கதை எழுதி தயாரித்த ஒரு படத்தின் அப்பட்டமான காப்பி என டுவிட்டரில் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மணிரத்னம் திரைக்கதை எழுதி, தயாரித்த ‘சத்ரியன்’ என்ற திரைப்படத்தை அவருடைய நண்பர் கே.சுபாஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த், ரேவதி, பானுப்ரியா, திலகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் போலீஸ் வேலையை விட்டுவிட்டு ஒதுங்கியிருக்கும் விஜயகாந்த்தை மீண்டும் வில்லன் போலீஸ் வேலைக்கு இழுப்பதுதான் கதை.
இந்நிலையில் இந்த படத்தின் அப்பட்டமான காப்பியே ‘விஜய் 59’ என்று கூறப்படுகிறது. விஜயகாந்த் வேடத்தில் விஜய்யும், பானுப்ப்ரியா வேடத்தில் எமி ஜாக்சனும், ரேவதி வேடத்தில் சமந்தாவும், திலகன் வேடத்தில் இயக்குனர் மகேந்திரனும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படம், மணிரத்னம் இயக்கிய ‘மெளன ராகம்’ படத்தை ஒட்டியே இருந்தது என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில் மீண்டும் ஒரு மணிரத்னம் படத்தை அவர் சுட்டுள்ளதாக டுவிட்டரில் பரபரப்பாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விஜய், அட்லி மீது மணிரத்னம் வழக்கு போடுவாரா? என்பது குறித்த கேள்விகள் கோலிவுட்டில் எழுந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.