Thol-Thirumavalavanதிமுக கூட்டணியில் பல வருடங்களாக நீடித்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இந்த தேர்தலில் நான்கு தொகுதிகள் வரை கேட்டிருந்தது. ஆனால் திமுக, விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியது.

இதனால் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதால், கூட்டணி முறியும் நிலை உருவானது. அதன்பின்னர் விடுதலைச்சிறுத்தைகளுக்கு திமுக கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கி, பிரச்சனையை முடித்து வைத்தது.

இந்நிலையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் அந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி சிதம்பரத்தின் கட்சியின் தலைவர் திருமாவளவனும், திருவள்ளூஉரில் ரவிகுமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply