அவன் பிரம்மசாரியோ, கிருஹஸ்தனோ, வானப்ரஸ்தனோ, ஸந்நியாஸியோ எவராயினும் மஹாபாதக உபபாதகப் பாபங்களினின்று பரிசுத்தமாவான், எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தவனாவான். எல்லா வேதங்களையும் ஓதியவனாவான், எல்லா தேவர்களையும் உணர்ந்தவனாவான். எப்பொழுதும் எல்லா ருத்ர மந்திரங்களையும் ஜபித்தவனாவான். எல்லா போகங்களையும் அனுபவிப்பான். உடலை விட்டபின் சிவஸாயுஜ்ய மடைவான். மீண்டும் பிறக்க மாட்டான் !!
Leave a Reply
You must be logged in to post a comment.