shadow

மாயமான வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

ராஜஸ்தான் போலீசார் இன்று விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் அகமதாபாத் வீட்டிற்கு ஒரு பழைய வழக்கு குறித்த விசாரணைக்கு சென்றனர். அவரிடம் நேரில் அந்த வழக்கின் சம்மன் அளிக்க சென்ற நிலையில் பிரவீன் தொகாடியா வீட்டில் இல்லாததாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குஜராத் போலீசார் அவரை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர்

இந்த நிலையில் பிரவீன் தொகாடியா அகமதாபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த அளவு சர்க்கரை அளவு காரணமாக அவர் சுயநினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்