இன்று முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடைபெறும் என்று காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதை அடுத்து இரவில் யாரும் வாகனத்தில் செல்ல கூடாது என்றும், மீறி வாகனத்தில் செல்பவர்களை கண்காணிப்பதற்காக சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்று பகலில் கூட வாகனங்கள் செல்ல கூடாது என்றும் ஆனாலும் ஊரடங்கின் மருத்துவ காரணங்களுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.