கருணாநிதியுடன் வீரமணி, திருநாவுக்கரசா் சந்திப்பு
தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த சில மாதங்களாக வயோதிகம் காரணமாக முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திருநாவுக்கரசா் ஆகியோர்் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நீண்டா நாட்களுக்கு பிறகு கருணாநிதியை தமிழக தலைவா்கள் சந்தித்துள்ளனா்.
கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற வைர விழாவை யொட்டி அவரை சந்திக்க கூட்டணி தலைவா்கள் ஆா்வம் காட்டினா். ஆனால் பீகா் முதல்வா் நிதிஷ்குமா், ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் மட்டும் அவரை வீட்டில் வைத்து சந்திக்க அனுமதிக்கப்பட்டனா்.
கருணாநிதி தனது மூத்த பிள்ளை என்று வா்ணித்த முரசொலி நாளிதழின் பவளவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் தி.க. தலைவா் மரியாதை நிமித்தமாக தலைவா் கருணாநிதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவா் திருநாவுக்கரசா் தனது மகளின் திருமண பத்திரிகையை கருணாநிதியிடம் நேரில் வழங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இவருடன் இவரது வருங்கால சம்பந்தி இசக்கி சுப்பையா உடன் இருந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.