shadow

veena-malik-in-deep-trouble-517x380பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் ஆசாத் கதாக் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை அளிக்க பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிதாக திருமணமான இந்த நட்சத்திர ஜோடி பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

சமீபத்தில் வீணா மாலிக் ஆசாத் கதாக் என்பவரை திருமணம் செய்தார். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேரடியாக பாகிஸ்தானில் உள்ள ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆசாத் கதாக் ஒரு முஸ்லீம் என்பதால் முஸ்லீம் மத பாடல் ஒன்றை இந்த நேரடி ஒளிபரப்பின் பின்னணியில் அந்த தொலைக்காட்சி ஒலிக்க வைத்தது.

ஒரு கவர்ச்சி நடிகை, அதுவும் அடிக்கடி டுவிட்டர் போன்ற இணையதளங்களில் நிர்வாண போஸ் கொடுத்த ஒரு நடிகையின் வரவேற்பு நிகழ்ச்சியில் புனிதமான இஸ்லாம் பாடல் ஒளிபரப்பியதை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று, வீணா மாலிக், அவரது கணவர் மற்றும் ஜியோ டிவி நிறுவனம் ஆகியவற்றின் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜியோ டிவியின் உரிமையாளர் ஷகிலூர் ரெஹ்மான், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஷாஸ்தான் லோதி, மாலிக், மற்றும் காதாக் ஆகியோர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீணா மாலிக், அவரது கணவர் ஆசாத் காதக் உள்பட அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் பாகிஸ்தானிலும் பாலிவுட்டிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply