மரண தண்டனை கைதிக்கு உதவி செய்யும் ஆபாச பட சர்ச்சை நடிகை
வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல படங்களில் நடித்த நடிகை வசுந்தரா சமீபத்தில் ஆபாச பட சர்ச்சையில் சிக்கினார். அவர் ஆண் ஒருவருடன் அரைகுறை ஆடையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பாகியது. இதுகுறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்காதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் தற்போது வசுந்தரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘புத்தர் இயேசு காந்தி’ என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வசுந்தரா பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார். இவருடன் அசோக், கிஷோர், மதுமிதா, அகில் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் தவறு செய்யாத ஒருவர் மரண தண்டனைக்கு உள்ளாகிறார். அவரை பத்திரிகையாளரான வசுந்தராவும் அசோக்கும் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதை விறுவிறுப்புடன் சொல்ல உள்ளார்களாம். மரண தண்டனை கைதியாக நடிப்பவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மூன்றே நாட்களில் நடக்கும் கதை என்றும் படத்தின் பெரும்பகுதி இரவில் நடப்பாதாக இருக்கும் என்றும் இயக்குனர் வெற்றிவேல் சந்திரசேகர் கூறியுள்ளார். சென்னையின் இரவு நேர இன்னொரு முகத்தை வியப்பூட்டும்படி இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.