shadow

அதிமுக எம்.எல்.ஏவை அடித்தவர் மர்ம மரணம்: வேலூரில் பரபரப்பு

சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலசப்பாக்கம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவை வசந்தமணி என்பவர் கன்னத்தில் தாக்கினார். இதனால் எம்.எல்.ஏ காயமடைந்த நிலையில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த 23ஆம் தேதி வசந்தமணி கைதானார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தமணிக்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமானது. அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை வசந்தமணி திடீரென மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து நீதிவிசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வசந்தமணியின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply