shadow

வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி:

உபி மாநிலத்தை சேர்ந்த வாரணாசியில் பாலம் ஒன்று கட்டுமானப்பணியில் இருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply