தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை திரையுலகினர் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று தான் கேட்க வேண்டும். அதேபோல் அரசியல்வாதிகள் நமக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட நாம் அரசியல்வாதிக்கு என்ன செய்வோம் என்பதை காட்டவேண்டும். நாளை தேர்தலில் அரசியல்வாதிகளை ஓட்டு போட்டு செஞ்சுடுவோம் ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு’

 

Leave a Reply