இதுவும் தப்புதான், அதுவும் தப்புதான்: நடிகை வரலட்சுமி

கொரோனா வைரஸிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அதை கடுமையாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

இதனையும் மீறி ஒரு சிலர் சாலைகளில் நடந்தும், இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டும் இருக்கின்றனர். அவர்களை முதலில் எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர் தற்போது சாலையில் நடமாடுபவர்களையும் வாகனங்களில் வருபவர்களையும் லத்தியால் அடித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாலையில் நடந்து செல்பவர்களை போலீசார் அடிப்பது குறித்து கருத்து கூறிய நடிகை வரலட்சுமி ’ஊரடங்கு உத்தரவின்போது வெளியே வருவது என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்பதும் அவர்களை போலீசார் அடிப்பது தவறு என்றும் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் வரலட்சுமி கூறியுள்ளார். போலீஸ் செய்ததும் தப்பு, பொதுமக்கள் செய்வதும் தப்பு என வரலட்சுமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply