வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.