shadow

soundharyaரஜினிகாந்த்-லதா தம்பதியின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவுக்கு ரஜினியின் குடும்பத்தினர்களும், சவுந்தர்யாவின் கணவர் அஸ்வின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு சவுந்தர்யாவை வாழ்த்தினர்.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. சவுந்தர்யா கடந்த வருடம் கோச்சடையான் என்ற இந்தியாவின் முதல் மோஷன் கேப்ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

Leave a Reply