தமிழகத்தில் ஒருசில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்று பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், நாளை தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply