எமனையும் வென்றவர் கருணாநிதி: வைகோ புகழாரம்
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று காவேரி மருத்துவமனைக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம் என்றும் அவர் எமனையும் வென்று வருவார் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்தேன். அதன்பின், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும் தானாகவே அதிலிருந்து அவர் மீண்டு விட்டார் என்பது மருத்துவ அதிசயம்.
தமிழர், தமிழகத்தின் நலனுக்காக பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகளையும், எதேச்சதிகாரத்தையும் எதிர்த்து போராடியிருக்கிறார். இப்போது எமனுடன் போராடுகிறார். அவர் எமனையும் ஜெயித்து வருவார்” என்று கூறினார்
கருணாநிதி, வைகோ, எமன், மதிமுக, திமுக,
Leave a Reply
You must be logged in to post a comment.