ஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா? வைகோ
ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவராக்குவதே தனது லட்சியம் என்று கூறும் பெருந்தன்மையான தலைவர் வைகோ என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று சபதம் ஏற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதும், அதற்கு அரசு தரப்பில் இருந்து அமைச்சர்கள் பதில் சொல்வதுமாக உள்ளது.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்கும் ஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிமுகவிற்கு சவால் விட்டுள்ளார். அரசுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.