வைகோவுக்கு எல்லாமே நாடகம்தான். தமிழிசை செளந்தரராஜன்
அரசியலில் நாடகத்தை மட்டுமே நடத்தி வரும் வைகோவுக்கு எதைப்பார்த்தாலும் நாடகமாகத்தான் தெரியும். எனவேதான் சுஷ்மாசுவராஜின் இலங்கை பயணத்தையும் வைகோ நாடகம் என்று சொல்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது மகன் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக, திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை சந்தித்தார். தமிழிசை சௌந்தரராஜனின் மகன் திருமண நிகழ்ச்சி பிப்ரவரி 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: ”வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க.வின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பா.ஜ.க. தான்.
சுஷ்மாசுவராஜின் இலங்கை பயணம் நாடகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். எப்போதும் நாடகம் நடத்தி கொண்டிருக்கும் வைகோவுக்கு எல்லாமும் நாடகமாகத்தான் தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சரியான வெளியுறவு கொள்கையை இலங்கையில் நிலைநிறுத்திவிட்டு வந்துள்ளார். அதை நாடகம் என்று சொன்னால் வைகோவின் பார்வைக்கு உண்மை எது என்று தெரியவில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை, அவரின் அங்கீகாரத்திற்காகவும் நாங்கள் காத்திருக்கவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.