வேட்டை மன்னன், வாலு என இரண்டு படங்களை அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் கௌதமின் படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் சிம்பு. அப்படியானால் மற்ற இரு படங்களின் கதி? அந்த இரு படங்களையும் தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் நிலைமை?
இந்த இரு கேள்விகளுக்கும் வாலு இயக்குனர் விஜய் சந்தர் பதிலளித்திருக்கிறார்.
வாலு படத்தின்…டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டதாம். பாடல்கள் மட்டுமே பாக்கி. அதற்காக சென்னையில் அரங்கு அமைக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும். இரண்டுக்கும் காசில்லாததால் அப்படியே தொங்கலில் விட்டிருக்கிறார் தயாரிப்பாளர். இன்னும் சில நாள்களில் பணப் பிரச்சனை முடிந்து படப்பிடிப்புக்கு கிளம்பிடுவோம் என்றிருக்கிறார் விஜய் சந்தர்.
டிசம்பரில் படத்தை முடித்து பிப்ரவரியில் சிம்பு பிறந்தநாளில் படத்தை வெளியிடுவதாக திட்டமாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.