உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் திடீர் மரணம்
சோவியத் யூனியனிடம் இருந்து விடுதலை பெற்ற உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் 78வயது இஸ்லாம் கரிமோவ் என்பவர் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.
சமீபத்தில் அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி இஸ்லாம் கரிமோவ் நேற்று மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உஸ்பெகிஸ்தான் அரசு உடனடியாக இந்த தகவலை உறுதி செய்யவில்லை. இருப்பினும், கரிமோவ் இறந்த தகவலை துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் அந்நாட்டு கேபினேட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.
உஸ்பெகிஸ்தானில் அடுத்து அதிபராக யார் பதவி ஏற்பது என்பதை அவரது குடும்பத்தினரும், உயர் அதிகாரிகளும் விவாதித்து முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.