shadow

harish-rawat_13_06_2014உத்தர்காண்ட் முதலமைச்சர் ஹரீஸ் ரவாத் நேற்று மாலை டேராடூனில் இருந்து டெல்லிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஹெலிகாப்டர் மேகக்கூட்டத்தில் மோதியதால் நிலைகுலைந்தது. எனினும் சாமர்த்தியமாக பைலட் செயல்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது.

இருப்பினும் ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ஹரீஸ் ரவாத், சீட் பெல்ட் அணியாமல் உட்கார்ந்திருந்ததால், அவருடைய தலை ஹெலிகாப்டரின் கூரை மீது மோதியது. இதனால் அவருடைய கழுத்தில் எலும்பில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் அவசரமாக டெல்லியில் தரையிரக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மரணத்திற்கும் சீட் பெல்ட் அணியாததே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply