அமெரிக்காவில் புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த Amanda Karth என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தபோது நெஞ்சுவலி காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். திடீர் நெஞ்சு வலியால் பாதிக்கபட்டிருந்த மனைவியை காப்பாற்ற அவரது கணவர் கடும் முயற்சி செய்தார். அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் நான்கு நாட்கள் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் கண்விழித்தபோது திருமணம் உள்பட கடந்த காலத்தின் சில நினைவுகள அவர் இழந்தார்.

எனவே Amanda Karth, தன் கணவரையே மீண்டும் ஒருமுறை திருமணம் செய்யவேண்டும் என விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களது திருமணம் ஒரு வாரம் கழித்து மறுபடியும் நடந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் ஒருமுறை திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply