கேப்டன் சஸ்பெண்ட், முக்கிய வீரர் காயம்: நிலைகுலைந்து போன இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக சொந்த நாட்டில் விளையாடும் போட்டிகளில் கூட படுதோல்வி அடைந்து வருகிறது. ஏற்கனவே ஜிம்பாவிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி தற்போது இந்தியாவிடமும் படுதோல்வி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தரங்காசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த அணியின் முன்னணி வீரர் குணதிலகா காயம் அடைந்துள்ளார். இந்த இருவருக்கு பதிலாக இலங்கை அணியில் சண்டிமல், திரிமன்னே சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தொடர் தோல்வியை பெற்று வரும் இலங்கை அணி கேப்டன் மற்றும் குனதிலகா வெளியேற்றத்தால் நிலைகுலைந்து போயுள்ளதாக இலங்கை கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.