shadow

helicopter

உத்தரபிரதேச முதல்வர் மனைவியுடன் ஹெலிகாப்டரில் சென்ற போது நடக்கவிருந்த விபத்தை விமானி சமயோசிதமாக சமாளித்ததால் இருவரும் உயிர் தப்பினர்.

உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் சென்ற ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று திடீரென மோதியது.

3000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் ஹெலிகாப்டர் நிலை தடுமாறியது. ஆனால் விமானி சுதாரித்து ஹெலிகாப்டரை சாதுர்யமாக லக்னொ விமான நிலையத்தில் தரையிறக்கியதால் அதிர்ஷ்டவசமாக முதல்வரும் அவருடைய மனைவியும் உயிர் தப்பினர். இதனால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply