அண்ணா, அண்ணாமலை, சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிபரங்கள்

தொடர் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் திவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளதன்படி, ‘அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அப்பல்கலையின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், தொடர் கனமழையின் காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழான கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

Leave a Reply