shadow

budgetமத்திய அரசின்  2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் 2022 க்குள் அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

 

 * அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.

* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

 

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை.

* வரி தவிர்ப்பு தடுப்பு விதிமுறை மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

* பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க சட்டம்.

* சேவை வரி 12.34 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு.

* மத்திய கலால் வரி ஒரே சீராக 12.5 சதவீதமாக இருக்கும்.

* பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

* ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 2 சதவீதம் கூடுதல் வரி.

* ரொக்கப் பணபரிமாற்றம் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அசையா சொத்து வாங்கத் தடை.

* செல்வ வரி ரத்து செய்யப்படும்.

 

வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டுகள் சிறை

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

 

பான்கார்டு கட்டாயம் தொடரும்

* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும்.

* தேசிய ஓய்வூதிய திட்ட முதலீட்டுக்கு ஒன்றரை லட்சமாக உயர்வு.

* சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு முழு வரி விலக்கு.

* போக்குவரத்து படி இரட்டிப்பாக்கப்படுகிறது.

* ஓய்வூதியத்துக்கான முதலீடுகளை ஊக்குவிக்க வரிச்சலுகை.

* பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் வட்டிக்கு வரிவிலக்கு.

* வருமான வரியில் போக்குவரத்து படி வரம்பு ரூ.800லிருந்து ரூ.1,600 ஆக உயர்கிறது.

 

வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு

* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.

* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.

2022ல் அனைவருக்கும் வீடு

* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்  வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.

* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.

* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.

 

6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்

* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.

* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.

* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.

* இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

 நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு

* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.

* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

100  நாள் வேலை திட்டம் தொடரும்

* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.

* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.

* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.

 

ஜன் தன் வங்கி கணக்கு சாதனை

* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில்  மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.

* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது  அரசின் முக்கிய குறிக்கோள்.

* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.

* பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.

* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி.

 

அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதி

* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

* மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும்.

ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு

* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

* விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும் அவசியம்.

விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன்

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.

* உலகிலேயே சிறப்பான பங்குச்சந்தையில் இந்தியாவுக்கு 2வது இடம்.

* சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மக்களையும் முறையான நிதிசேவை நடைமுறைக்குள் கொண்டு வர திட்டம்.

 

மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

* மத்திய அரசின் வரி வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக  ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

 

கூடங்குளம் 2வது அணுஉலையில் நடப்பாண்டில் மின்உற்பத்தி

* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.

* நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

* தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி நிதி.

 

5 மிகப்பெரும் மின் திட்டங்கள்

* 5 மிகப்பெரும் மின் திட்டங்கள் தொடங்கப்படும்.

* நூறுநாள் வேலைவாப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* சிறுபான்மை பிரிவு இளைஞர் நலனுக்காக நயிமன்சில் என்ற புதிய திட்டம்.

 

வருங்கால வைப்பு நிதி திட்டம் விருப்ப திட்டமாக மாற்றப்படும்

 

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிமுறைகள் மாற்ற அமைக்கப்படும்.

* கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

* அரசின் பொருள் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

 

எளிதான விசா நடைமுறை அறிமுகம்

 

* 150 நாடுகளுக்கு இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை விரிவுப்படுத்தப்படும்.

* சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை.

* விசா நடைமுறைகள் எளிதானதால் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது.

* வருகையின்போது விசா வழங்கும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளில் மேம்பாடு.

சூரிய ஒளி மின்சக்தி

* 20022க்குள் 1.75 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு.

* மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

 

கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை

* கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.

* அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.

* தங்க நாணய பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் தங்கத்தை டெபாசிட்  செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

* மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்.

* மருத்துவ காப்பீடு பிரீமியம் வரிச் சலுகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு.

* மருத்துவ காப்பீட்டிற்கான வரிவிலக்கு ரூ.25,000 ஆக உயர்வு.

Leave a Reply