shadow

12806152_1120450204640634_1250944761504667809_n

உன்னுடைய க்ருஷ்ணன்
எல்லோரையும் விட மிகப்பெரியவன்தான் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தாயைக் காட்டிலும்
உன்னிடத்தில் பரிவுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன் தந்தையைக் காட்டிலும்
உன்னிடத்தில் அக்கறையுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன் குழந்தைகளைக் காட்டிலும்
உன்னிடத்தில் பாசமுடையவன் !

உன் க்ருஷ்ணன்
உன்னுடைய சகோதர,சகோதரிகளைவிட
உன்னிடத்தில் சினேகமுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன் நண்பர்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் நட்புடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய வேலைக்காரர்களைவிட
உன்னிடத்தில் விசுவாசம் உடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னுடைய பந்துக்களைக் காட்டிலும்
உன்னிடத்தில் பந்தம் உடையவன் !

உன் க்ருஷ்ணன்
மற்றவர்களை விட
உன்னிடத்தில் நன்றியுடையவன் !

உன்னுடைய க்ருஷ்ணன்
உன்னைக் காட்டிலும்
உன்மீது அன்புடையவன் !

உன்னை உனக்கு சிறிது
வருஷங்களாகத்தான் தெரியும் !

உன்னை உன் பெற்றோருக்கு
நீ பிறந்ததிலிருந்துதான் தெரியும் !

மற்றவருக்கு உன்னை
சில வருஷங்களாகத் தெரியும் !

ஆனால் யாருக்குமே
உன்னுடைய பூர்வஜன்மாவோ,
உன்னுடைய பாவ புண்ணியங்களோ,
உன்னுடைய மனதோ,
உள்ளபடி தெரியவே தெரியாது . . .

ஏனெனில் யாரும் நிரந்தரமில்லை . . .

க்ருஷ்ணனுக்கோ உன்னை
ஆதியிலிருந்து தெரியும் . . .
உன் உடலை அங்குலம் அங்குலமாக
நன்றாகத் தெரியும் . . .
உன் மனதை உனக்குள்ளிருந்தே
பார்த்துக் கொண்டிருக்கிறான் . . .

உன்னைப்பற்றி
எல்லோரையும் விட
மிக நன்றாகத் தெரிந்தவன் க்ருஷ்ணனே!

அதனால் க்ருஷ்ணனை
திடமாக நம்பு !
வாழ்க்கையில் அவனுக்கு
எல்லோரையும் விட
முக்கியத்துவம் தா !

அவனுக்குக் கீழ்தான்
மற்ற அனைவருமே !

அவன் உன் கண்ணன் !

Leave a Reply