திடீரென சுருண்டு விழுந்த நடுவர்: ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பு

கடந்த சில நாட்களாக ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் பந்து நடுவரை தாக்கியதால் அந்த நடுவர் சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படட்து

பெங்கால் மற்றும் சௌராஷ்ட்ரா அணிகளுக்கு இடையே ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று ராஜ்கோட்டில் நடந்தது. இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது பந்தை ஒரு வீரர் எறிந்த போது எதிர்பாராதவிதமாக நடுவரின் அடி வயிற்றில் பட்டது இதனால் நடுவர் சுருண்டு விழுந்தார்

அதன்பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த தொடருக்கு மாற்று நடுவராக இன்னொரு நடுவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply