shadow

6165287006b9cd364002a9dec3ef8d68

நீ ஏன் கலங்குகிறாய் !
நீ ஏன் புலம்புகிறாய் !
நீ ஏன் அழுகிறாய் !
நீ ஏன் துடிக்கிறாய் !
நீ ஏன் நொந்துபோகிறாய் !
நீ ஏன் துவண்டுபோகிறாய் !
நீ ஏன் நடுங்குகிறாய் !
நீ ஏன் உடைந்து போகிறாய் !
நீ ஏன் தவிக்கிறாய் !
நீ ஏன் பயப்படுகிறாய் !
நீ ஏன் குழம்புகிறாய் !
நீ ஏன் பரிதவிக்கிறாய் !
நீ ஏன் நம்பிக்கையை இழக்கிறாய் !
நீ ஏன் பலவீனமாகிறாய் !
ஹே மனமே நீ யாரென்று
உனக்கு நன்றாக தெரிந்துவிட்டால்
பிறகு நீ தெளிந்துவிடுவாய் . . .
ஹே மனமே நீ யார் தெரியுமா ? ? ?
க்ருஷ்ணன் கீதையில் சொல்கிறான் . . .
“இந்திரியங்களுள் நான் மனதாக இருக்கிறேன்”
இப்பொழுது புரிந்ததா . . .
ஆதலால் நீ க்ருஷ்ணனின் அம்சம் . . .
நீ க்ருஷ்ணனின் சக்தி . . .
நீ க்ருஷ்ணனின் சொத்து . . .
அதனால் இனியாவது
நீ கலங்காதிரு !
நீ புலம்பாதிரு !
நீ அழாமலிரு!
நீ துடிக்காமலிரு!
நீ நொந்துபோகாமலிரு !
நீ துவண்டுபோகாமலிரு !
நீ நடுங்காமலிரு!
நீ உடைந்து போகாமலிரு!
நீ தவிக்காமலிரு!
நீ பயப்படாமலிரு!
நீ குழம்பாமலிரு!
நீ பரிதவிக்காமலிரு !
நீ நம்பிக்கையை இழக்காமலிரு!
நீ பலவீனமாகாமலிரு!
உன்னால் முடியும் !
நம்பிக்கையோடு வாழ முடியும் !
உலகை வெல்ல முடியும் !
துன்பத்தை வெல்ல முடியும் !
கஷ்டங்களை வெல்ல முடியும் !
அவமரியாதைகளை வெல்ல முடியும் !
அசிங்கங்களை வெல்ல முடியும் !
நம்பிக்கை துரோகங்களை வெல்ல முடியும் !
வியாதிகளை வெல்ல முடியும் !
குழப்பங்களை வெல்ல முடியும் !
குடும்பத் தகராறுகளை வெல்ல முடியும் !
காலத்தை வெல்ல முடியும் !

முடியும்…முடியும்…முடியும்…
ஹே அற்புதமான மனமே !
உன்னால் முடியும்…

Leave a Reply