மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் உதயநிதி: பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

நேற்று துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, ‘முரசொலி கையில் இருந்தா திமுககாரன், துக்ளக் கையில் இருந்தா அறிவாளி’ என்று பேசினார். அதேபோல் சோ அவர்களை கருணாநிதி மற்றும் பக்தவத்சலம் ஆகிய இருவர் தான் பிரபலமாக்கியதாக்கியதாகவும் பேசினார். இந்த பேச்சு நிச்சயம் திமுகவினர்களை அதிருப்தி அடைய செய்திருக்கும்

அந்த வகையில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

உதயநிதியின் இந்த டுவிட்டுக்கு ரஜினி ரசிகர்களும் நெட்டிசன்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply