வெயில், அங்காடித்தெரு, அரவான்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் ‘காவியத் தலைவன்’. இந்த படத்தில் சித்தார்த் ,ப்ருத்விராஜ் ,வேதிகா இவர்களுடன் நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். நாடகக் கலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
1947ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தின் கதையைக் கொண்ட ‘காவியத் தலைவன்’ படத்தில், கே.பி.சுந்தராம்பாளின் கதையும் உள்ளதாக கூறப்படுகிறது.
‘காவியத் தலைவன்’ படத்தின் டிரெய்லர், இந்தத் தீபாவளியை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. சென்சார் தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.
ட்ரீம் ஃபேக்டரி வெளியிட உள்ள ‘காவியத் தலைவன்’ நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.