2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல். ஜெர்மனியில் பயங்கர விபத்து
சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தின் அதிர்ச்சியே நீங்காத நிலையில் நேற்று ஜெர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் வரை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் இருந்து 60 கி.மீ. தென் கிழக்கே அமைந்துள்ள பேட் அய்பிலிங் என்ற நகரில் பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் மற்றும் மீட்பு படையினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடுபாடுகளில் மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.