shadow

SAHITHYAதமிழகத்தைச் சேர்ந்த இரா.நடராஜன் மற்றும் ஆர்.அபிலாஷ் ஆகிய இருவருக்கும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சாகித்ய அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருதுக்கு, மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ் மொழியில் ‘விஞ்ஞான விக்ரமாதித்தன் “என்ற புத்தகத்தை எழுதிய ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
 
மேலும் சாகித்ய அகாடமியின் சார்பில் 21 எழுத்தாளர்களுக்கு இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 21 பேர்களில் “தமிழ் கால்கள்” என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஆர்.அபிலாஷும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது. விருது வழங்கும் தேதி, இடம் முதலியவை பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.

Leave a Reply